/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/டூவீலரில் விடிய விடிய ஆற்று மணல் கடத்தல்டூவீலரில் விடிய விடிய ஆற்று மணல் கடத்தல்
டூவீலரில் விடிய விடிய ஆற்று மணல் கடத்தல்
டூவீலரில் விடிய விடிய ஆற்று மணல் கடத்தல்
டூவீலரில் விடிய விடிய ஆற்று மணல் கடத்தல்
ADDED : ஜூலை 16, 2024 01:42 AM
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, அனிச்சம்பாளையம், நன்செய் இடையார், பொத்தனுார், வெங்கரை, அண்ணா நகர், பிலிக்கல்பாளையம் பகு-திகளில் இரவு நேரத்தில் டூவீலர்களில் மணல் கடத்தல் ஜோராக நடந்து வருகிறது.
குறிப்பாக, அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு பகுதிகளில் மணல் கடத்தல் நாள்தோறும் நடந்து வருகிறது. ஆனால், மணல் கடத்தலை தடுக்க வேண்டிய வருவாய் துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, போலீஸ் துறை அதிகாரிகள் மவுனம் காத்து வருகின்றனர். டூவீலரில் மணல் கடத்தும் கும்பல், தெரு விளக்குகளை சேதப்படுத்தி அட்-டூழியம் செய்து வருகின்றனர்.காவிரி ஆற்றில் மணல் கடத்தலால் மண் வளம், நீர்வளம், சுற்-றுச்சூழல் பாதிப்பு என அனைத்து அபாயங்களும் ஏற்படும் நிலையை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.