/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்
ADDED : செப் 12, 2025 02:24 AM
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:
பொது வினியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடு குறித்த புகார்களை மேற்கொள்ளவும், பொது வினியோக திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க, குறைதீர் நாள் முகாம், நாளை (செப்., 13) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை நடைபெற உள்ளது.
நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் முகாம்களில் பங்கேற்று, ரேஷன் கார்டு தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.