Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உங்களை தேடி உங்கள் ஊரில் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களை தேடி உங்கள் ஊரில் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களை தேடி உங்கள் ஊரில் நலத்திட்ட உதவி வழங்கல்

உங்களை தேடி உங்கள் ஊரில் நலத்திட்ட உதவி வழங்கல்

ADDED : மே 29, 2025 01:51 AM


Google News
பள்ளிப்பாளையம் :நாமக்கல் மாவட்டத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டு, மாவட்டத்தில் உள்ள, எட்டு தாலுகாவில் நிறைவடைந்தது. இரண்டாம் கட்டமாக, நேற்று குமாரபாளையம் தாலுகாவில் நடந்தது. கலெக்டர் உமா, குமாரபாளையம் தாலுகா பகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், உட்கட்டமைப்பு வசதிகள், சாலைப்பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

இதையடுத்து, பள்ளிப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், அரசு திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினார். பின், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us