Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 19ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

19ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

19ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

19ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ADDED : செப் 16, 2025 02:16 AM


Google News
நாமக்கல், 'மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும், 19ல், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:

தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும், நேரடியாக சந்திக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், வரும், 19 காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. தனியார் துறை நிறுவனங்கள், தங்களுக்கு தேவையான நபர்களை, அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.

இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு மேனேஜர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், ஏரியா மேனேஜர், டீம் லீடர், சூப்பர்வைசர், அக்கவுண்டண்ட், கேஷியர், டைப்பிஸ்ட், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டெண்ட் போன்ற பணிகளுக்கு தேர்வு செய்யவுள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர், தேர்ச்சி பெறாதவர், பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற ஆண், பெண் மற்றும் அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us