Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

கிடப்பில் சாலைப்பணி: வாகன ஓட்டிகள் அவதி

ADDED : செப் 14, 2025 04:45 AM


Google News
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், வேலணம்பாளையம் கிராமத்தில், கடந்த, 2024 செப்., 24ல், பிரதம மந்திரி கிராம சாலைகள் இணைப்பு திட்டத்தில், 97.78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 2.800 கி.மீ., தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கி-யது. பழைய தார்ச்சாலையை அகற்றி, அதன் மேல் மண் மற்றும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்ட நிலையில்

மேற்படி பணிகளை தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி, விவசா-யிகள், பொதுமக்கள் அதிகளவில் சாலையை பயன்படுத்தி வரு-கின்றனர். ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்ட நிலையில் உள்-ளதால் மக்கள் நடக்க முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வரு-கின்றனர்.

டூவீலர்களில் செல்வோர், சற்று வேகமாக சென்றால் கூட தவறி கீழே விழுந்து செல்ல வேண்டிய சூழலில் உள்ளனர். ஓராண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us