Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/விபத்தில் பரமத்தி தம்பதி பலி: 5 பேர் படுகாயம்

விபத்தில் பரமத்தி தம்பதி பலி: 5 பேர் படுகாயம்

விபத்தில் பரமத்தி தம்பதி பலி: 5 பேர் படுகாயம்

விபத்தில் பரமத்தி தம்பதி பலி: 5 பேர் படுகாயம்

ADDED : ஜூலை 22, 2024 12:19 PM


Google News
ப.வேலுார்: பரமத்தி அருகே டூவீலர் மீது கார் மோதியதில், தம்பதி பலியாகினர். தர்மபுரியை சேர்ந்த ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே, மறவாபாளையத்தை சேர்ந்தவர் சின்னையன், 70; விவசாயியான இவரது மனைவி சாந்தி, 60; இருவரும் பரமத்தியில் உள்ள மருத்துவமனைக்கு டூவீலரில் நேற்று காலை புறப்பட்டனர். நாமக்கல் - கரூர் பைபாஸ் சாலையில், 10:00 மணியளவில் சென்றபோது, நாமக்கல் நோக்கி சென்ற கார், டூவீலர் மீது மோதி கவிழ்ந்தது.

இதில் சின்னையன், சாந்தி சம்பவ இடத்தில் பலியாகினர். காரை ஓட்டிய தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார், 34, இவரது மனைவி ரேணுகாதேவி, 30, உறவினர்கள் சித்ரா, 26, வெங்கடேஷ், 30, விஜயகுமார், 35, படுகாயம் அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us