/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியின் அலுவலகம் திறப்பு தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியின் அலுவலகம் திறப்பு
தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியின் அலுவலகம் திறப்பு
தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியின் அலுவலகம் திறப்பு
தேசிய வேளாண் ஊரக வளர்ச்சி வங்கியின் அலுவலகம் திறப்பு
ADDED : ஜூன் 06, 2025 01:16 AM
நாமக்கல், நாமக்கல்லில், தேசிய வேளாண், ஊரக வளர்ச்சி வங்கியின், மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
நாமக்கல், பதி நகரில் அமைந்துள்ள தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தை, நபார்டு வங்கியின் துணை மேலாண் இயக்குனர்கள் அஜய் கே. சூட் மற்றும் ராவத் ஆகியோர் காணொலி மூலமாக திறந்து வைத்தனர். விழாவில், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் சுபாஷ் வங்கியின் பணிகள் குறித்து விவரித்தார்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன், வேளாண் விஞ்ஞானி அழகுதுரை, தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் மகாராஜன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நாமக்கல் துணை பொது மேலாளர் குணசேகரன் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்