/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்: விரைவில் பணியை துவங்க பயணியர் எதிர்பார்ப்புநாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்: விரைவில் பணியை துவங்க பயணியர் எதிர்பார்ப்பு
நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்: விரைவில் பணியை துவங்க பயணியர் எதிர்பார்ப்பு
நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்: விரைவில் பணியை துவங்க பயணியர் எதிர்பார்ப்பு
நாமக்கல் - அரியலூர் புதிய ரயில் பாதை திட்டம்: விரைவில் பணியை துவங்க பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 11, 2024 02:01 PM
நாமக்கல் : 'நாமக்கல் -- அரியலுார் புதிய ரயில்பாதை அமைக்கும் பணி விரைவில் துவங்கப்படுமா' என, ரயில் பயணியர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.தமிழகத்தின் மையப் பகுதியான பெரம்பலுார் மாவட்டத்தில், ரயில் போக்குவரத்து வசதியில்லை.
ஆனால், பெரம்பலுார் மாவட்டத்தை சுற்றியுள்ள அரியலுார், திருச்சி, சேலம், விழுப்புரம், கடலுார் ஆகிய மாவட்டங்களில், ரயில் போக்குவரத்து வசதி உள்ளது. இதனால், பெரம்பலுார் மாவட்ட மக்கள் ரயில் போக்குவரத்து வசதி பயன்படுத்த, அரியலுார் அல்லது திருச்சிக்கு செல்ல வேண்டும். அதனால், இந்த மாவட்ட மக்கள், 50 ஆண்டுகளாக ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதை தொடர்ந்து, அரியலுார் - பெரம்பலுார்- - துறையூர்- தா.பேட்டை வழியாக, நாமக்கல் வரை, ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, லோக்சபாவில், எம்.பி., பாரிவேந்தர் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, மேற்கண்ட வழித்தடத்தில், நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் வகையில், 108 கி.மீ., துாரம் ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில், முதல் கட்டமாக, 'சர்வே' நடத்த உத்தரவிட்டது. அதற்காக, 16.20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, 'சர்வே' பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, எந்த முன்னேற்றமும் இன்றி இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதற்கிடையே, நாமக்கல் -- அரியலுார் வரை, புதிய ரயில் பாதைக்கு, 'பைனல் லோகேஷன் சர்வே' மேற்கொள்வதாக, மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த ரயில்பாதை வசதி அமைந்தால், பெரம்பலுார், துறையூர் பகுதி மக்கள் பயன்பெறுவதோடு, நாமக்கல்லில் இருந்து டெல்டா மற்றும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு நேரடி ரயில் இணைப்பு கிடைக்கும்.மேலும், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பகுதிகள் நன்கு முன்னேற்றமடையும். எதிர்காலத்தில் இந்த திட்டம், நாமக்கல்லில் திருச்செங்கோடு வழியாக ஈரோடு வரை நீட்டிக்கப்படும்போது, மேற்கு மாவட்டங்களுக்கு சென்னை மற்றும் டெல்டா பகுதிகளுக்கு செல்ல மாற்றுப்பாதையாக அமையும்.அதனால், விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துவங்க வேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.