/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அம்மன் கழுத்தில் இருந்து நகை திருடியவர் கைது அம்மன் கழுத்தில் இருந்து நகை திருடியவர் கைது
அம்மன் கழுத்தில் இருந்து நகை திருடியவர் கைது
அம்மன் கழுத்தில் இருந்து நகை திருடியவர் கைது
அம்மன் கழுத்தில் இருந்து நகை திருடியவர் கைது
ADDED : செப் 11, 2025 01:55 AM
ப.வேலுார் நாமக்கல், கந்தம்பாளையம் அருகே, மணியனுார் வண்ணாம்பாறை பகுதியில், வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பெருங்குறிச்சி, உப்புபாளையத்தை சேர்ந்த வரதராஜ், 62, பூசாரியாக உள்ளார். கடந்த ஏப்., 26 இரவ, கோவிலை பூட்டி விட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் உண்டியல் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தது. மேலும், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க காசு திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க காசு திருடிய நபரை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று நல்லுார் மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து நல்லுார் எஸ்.ஐ., கங்காதரன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், தர்மபுரி அருகே, பாலக்கோடு பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் கிருஷ்ணமூர்த்தி 38, என்பது தெரியவந்தது. மேலும், வீரமாத்தி அம்மன் கோவிலில், அம்மன் கழுத்தில் இருந்த தங்க காசை திருடியதை ஒப்புக்கொண்டான். இதையடுத்து நல்லூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.