Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தையில் இன்று மனுக்கள் பெறல்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தையில் இன்று மனுக்கள் பெறல்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தையில் இன்று மனுக்கள் பெறல்

'உங்களை தேடி உங்கள் ஊரில்' சேந்தையில் இன்று மனுக்கள் பெறல்

ADDED : மார் 11, 2025 07:06 AM


Google News
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு, அரசின் பல்வேறு நலத்திட்டங்கள், சேவைகள் விரைவில் கிடைக்க, 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும், ஒரு நாள் தாலுகா அளவில் தங்கி, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய உள்ளது.

சேந்தமங்கலம் தாலுகாவில், வரும், 26ல், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டம் நடக்கிறது. இதையொட்டி, இன்று காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை, முன் மனுக்கள் பெறப்படுகின்றன. சேந்தமங்கலம் ஆர்.ஐ., அலுவலகத்தில், மண்டல துணை தாசில்தார், மண்டல துணை பி.டி.ஓ.; காளப்பநாயக்கன்பட்டி ஆர்.ஐ., அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலர், ஆர்.ஐ.; அலங்காநத்தம் ஆர்.ஐ., அலுவலகத்தில், மண்டல துணை பி.டி.ஓ., ஆர்.ஐ.; எருமப்பட்டி ஆர்.ஐ., அலுவலகத்தில், மண்டல துணை பி.டி.ஓ., ஆர்.ஐ., ஆகியோர், மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us