/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்புபாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்பு
பாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்பு
பாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்பு
பாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்பு
ADDED : ஜூலை 15, 2024 01:09 AM
ராசிபுரம்: பாசி பயருக்கு பயிர் காப்பீடு செய்ய, இன்றே கடைசி வாய்ப்பு என்பதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள, ராசிபுரம் வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:ராசிபுரம் பகுதியில், 2024--25ம் ஆண்டு பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காரீப் பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட-வுள்ளது.அதன்படி, பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி, மஞ்சள், வாழை பயிர்கள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.
இத்-திட்டத்தில், பாசிப்பயறு பயிருக்கு பிரிமீய தொகையாக ஏக்க-ருக்கு, 304.30- ரூபாய், இன்றைக்குள்ளும்; நிலக்கடலைக்கு, 420.89- ரூபாய், ஆக., 16க்குள்ளும்; சோளம், 136.80- ரூபாய், ஆக., 16க்குள்ளும்; மக்காச்சோளம், 638.25- ரூபாய், செப்., 16க்குள்ளும்; பருத்திக்கு, 499.80- ரூபாய், செப்., 16க்குள்ளும்; சின்ன வெங்காயத்-திற்கு, 1,230.06- ரூபாய், ஆக., 31க்குள்ளும்; தக்காளிக்கு, 1,017.64- ரூபாய், ஆக., 31க்குள்ளும்; மரவள்ளிக்கு, 619.48- ரூபாய், செப்., 16க்குள்ளும்; மஞ்சளுக்கு, 3,215.94- ரூபாய், செப்., 16க்குள்ளும்; வாழைக்கு, 1,857.44- ரூபாய், செப்., 16க்குள்ளும் செலுத்த வேண்டும்.எனவே, காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும், கடன்-பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள, 'விவசாயிகள் கார்-னரில்' நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் காப்பீடு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு, ராசிபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர் ஆகியோரை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிவேளாண்துறையினர் தங்கது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.