Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்பு

பாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்பு

பாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்பு

பாசி பயருக்கு காப்பீடு இன்றே கடைசி வாய்ப்பு

ADDED : ஜூலை 15, 2024 01:09 AM


Google News
ராசிபுரம்: பாசி பயருக்கு பயிர் காப்பீடு செய்ய, இன்றே கடைசி வாய்ப்பு என்பதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள, ராசிபுரம் வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:ராசிபுரம் பகுதியில், 2024--25ம் ஆண்டு பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் காரீப் பருவத்தில் பயிர்களுக்கு காப்பீடு செய்யப்பட-வுள்ளது.அதன்படி, பாசிப்பயறு, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், தக்காளி, மரவள்ளி, மஞ்சள், வாழை பயிர்கள் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இத்-திட்டத்தில், பாசிப்பயறு பயிருக்கு பிரிமீய தொகையாக ஏக்க-ருக்கு, 304.30- ரூபாய், இன்றைக்குள்ளும்; நிலக்கடலைக்கு, 420.89- ரூபாய், ஆக., 16க்குள்ளும்; சோளம், 136.80- ரூபாய், ஆக., 16க்குள்ளும்; மக்காச்சோளம், 638.25- ரூபாய், செப்., 16க்குள்ளும்; பருத்திக்கு, 499.80- ரூபாய், செப்., 16க்குள்ளும்; சின்ன வெங்காயத்-திற்கு, 1,230.06- ரூபாய், ஆக., 31க்குள்ளும்; தக்காளிக்கு, 1,017.64- ரூபாய், ஆக., 31க்குள்ளும்; மரவள்ளிக்கு, 619.48- ரூபாய், செப்., 16க்குள்ளும்; மஞ்சளுக்கு, 3,215.94- ரூபாய், செப்., 16க்குள்ளும்; வாழைக்கு, 1,857.44- ரூபாய், செப்., 16க்குள்ளும் செலுத்த வேண்டும்.எனவே, காரீப் பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும், கடன்-பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ மற்றும் கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ அல்லது தேசிய பயிர் காப்பீட்டு இணையதளத்தில் உள்ள, 'விவசாயிகள் கார்-னரில்' நேரிடையாகவோ நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குள் காப்பீடு செய்யலாம். கூடுதல் விபரங்களுக்கு, ராசிபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர் ஆகியோரை அணுகலாம்.இவ்வாறு அதில் தெரிவிவேளாண்துறையினர் தங்கது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us