/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஜெயலலிதா பிறந்தநாள் விழா குழந்தைகளுக்கு தங்க மோதிரம்ஜெயலலிதா பிறந்தநாள் விழா குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ADDED : பிப் 25, 2024 03:43 AM
ராசிபுரம்: ராசிபுரம், அ.தி.மு.க., சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பஸ் நிலையம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
நகர செயலர் பாலசுப்ரமணி தலைமை வகித்தார். ராசிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் நகர துணை செயலர் வாசுதேவன் தலைமையில், நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்செல்வன் கலந்து கொண்டார். தினேஷ்குமார்-மைனாவதி மற்றும் சந்தோஷ்-பிரியா ஆகிய தம்பதிகளுக்கு பிறந்த ஆண் குழந்தைகளுக்கு, 1 கிராம் மதிப்பிலான தங்க மோதிரங்களை அணிவித்தார்.
மாவட்ட அவைத் தலைவர் கந்தசாமி தலைமையில் நகர பொருளாளர் வெங்கடாஜலம், மனோகரன், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரம், ஆர். புதுப்பட்டி, மெட்டாலா, அரியாகவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
* பரமத்தியில் நடந்த விழாவில் அ.தி.மு.க., நகர செயலர் சுகுமார் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ப.வேலுாரில் நகர செயலர் பொன்னி வேலு மற்றும் வெங்கரை டவுன் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமார், நகர நிர்வாகிகளுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
* பள்ளிப்பாளையம் நகர அ.தி.மு.க., சார்பில் ஆவாரங்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலிதா பிறந்தநாள் விழா, நகர செயலர் வெள்ளிங்கிரி தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரவை செயலர் சுப்ரமணி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். அதே போல பள்ளிப்பாளையம் தெற்கு ஒன்றியம் சார்பில், பல்வேறு இடங்களில் ஒன்றிய செயலர் செந்தில் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.