ADDED : ஜூன் 02, 2025 06:50 AM
பவானி: அம்மாபேட்டை அருகே பூனாட்சி, கோணமூக்கனுாரை சேர்ந்தவர் பெருமாள், 63; கூலி தொழிலாளி. திருமணமாகி மனைவி, ஒரு மகன் உள்ளனர். உடல்நிலை சரியில்லாமல் பெருந்துறை உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவர், வீட்டில் யாருமில்லாத நேரத்தில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவ் மனைவி சின்னக்கண்ணு, கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக, அம்மாபேட்டை போலீசில் புகாரளித்துள்ளார்.