Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கர்ப்பிணி கொலையில் கணவன் கைது

கர்ப்பிணி கொலையில் கணவன் கைது

கர்ப்பிணி கொலையில் கணவன் கைது

கர்ப்பிணி கொலையில் கணவன் கைது

ADDED : ஜன 01, 2024 12:48 PM


Google News
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, ஆலமரத்துக்காட்டை சேர்ந்த சிவலிங்கம் மகன் ஹரிஹரன், 23; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவரின் மனைவி லட்சுமி, 22, நான்கு மாத கர்ப்பமாக இருந்தார். ஹரிஹரன் கடந்த, 23ல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது கணவன், மனைவிக்கு ஏற்பட்ட தகராறில், சுவரில் மோதி லட்சுமி மயக்கமானார்.

அக்கம்பக்கத்தினர் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். லட்சுமி கோமா நிலைக்கு சென்றார்.

இதையறிந்த ஹரிஹரன், 25ம் தேதி மருத்துவமனையிலேயே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்நிலையில், 29ம் தேதி லட்சுமி உயிரிழந்தார். இதையடுத்து ஆயில்பட்டி போலீசார், ஹரிஹரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us