Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வெளிநாட்டில் மருத்துவ படிப்பு குறித்து இன்றும், நாளையும் இலவச கருத்தரங்கு

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு குறித்து இன்றும், நாளையும் இலவச கருத்தரங்கு

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு குறித்து இன்றும், நாளையும் இலவச கருத்தரங்கு

வெளிநாட்டில் மருத்துவ படிப்பு குறித்து இன்றும், நாளையும் இலவச கருத்தரங்கு

ADDED : ஜூன் 14, 2025 07:57 AM


Google News
நாமக்கல்: சென்னையில், 23 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வரும், லிம்ரா ஓவர்சீஸ் நிறுவனம், வெளிநாட்டில் மாணவர்கள் கல்வி பயில, குறிப்பாக மருத்துவக் கல்வியை மேற்கொள்ள வழிகாட்டி வருகிறது. இதுவரை, 1,850 மருத்துவர்களை, வெளிநாட்டு மருத்துவ கல்லுாரிகள் மூலமாக உருவாக்கியுள்ளது.

லிம்ராவின் மற்றொரு நிறுவனமான லைம் பயிற்சி மையம், 12 ஆண்டுகளாக வெளிநாட்டில் மருத்துவம் முடித்த மாணவர்களுக்கு எப்.எம்.ஜி.இ., (FMGE) பயிற்சி அளித்து வருகிறது. இதில், 2024ல் நடந்த தேர்வில், 81 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளிநாட்டில் மருத்துவம் படிப்பது தமிழக மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பானதா? எந்தெந்த நாடுகள் நம் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்? பிலிப்பைன்ஸ், திமோர், ஜார்ஜியா, ரஷ்யா, அர்மேனியா போன்ற நாடுகள் மருத்துவம் படிக்க ஏற்றதாக இருக்கும்.

வெளிநாட்டில் மருத்துவம் படிக்க கட்டாயம் நீட் தேவையா? பிளஸ் 2 தேர்வில் எந்தெந்த பாடப் பிரிவுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்? முக்கியமாக மாணவர்கள் பாதுகாப்பு பற்றிய சந்தேகம் பெற்றோர்களுக்கு தோன்றும். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க எவ்வளவு செலவாகும்? தற்பொழுது என்.எம்.சி., விதிமுறைகள் என்னென்ன? அவற்றை பின்பற்றும் வெளிநாடுகள் எவை? வெளிநாட்டு மருத்துவ கல்விமுறை எத்தனை ஆண்டுகள் மருத்துவம் பயில வேண்டும்? வெளிநாட்டில் மருத்துவம் படித்த தமிழக மாணவர்கள் அரசு மருத்துவராக பணியற்றமுடியுமா? இதுபோன்ற கேள்விகளுக்கு லிம்ரா நிறுவனம் நடத்தும், இலவச கருத்தரங்கு விடை அளிக்கும்.

கருத்தரங்கம் நடைபெறும் இடங்கள்இன்று (௧௪ம் தேதி) மாலை, ௪:௩௦ மணிக்கு, நாமக்கல்லில் திருச்சி சாலையில் உள்ள தில்லைபுரம், டிப்ரான்ட் ஹோட்டல் கோல்டன் பேலசில் நடக்கிறது. நாளை (௧௫ம் தேதி) காலை, ௧௦:௩௦ மணிக்கு, ஈரோட்டில் சத்தி சாலையில் உள்ள ஓட்டல் ரத்னா ரெசிடென்சில் நடக்கிறது. மாலை, ௪:௩௦ மணிக்கு, சேலத்தில் ஜங்ஷன் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல் சிவராஜ் இன்னில் கருத்தரங்கு நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு, 99529-22333/9445483333/94457-83333 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us