Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாளை கோட்ட அளவில் விவசாயி குறைதீர் கூட்டம்

நாளை கோட்ட அளவில் விவசாயி குறைதீர் கூட்டம்

நாளை கோட்ட அளவில் விவசாயி குறைதீர் கூட்டம்

நாளை கோட்ட அளவில் விவசாயி குறைதீர் கூட்டம்

ADDED : மே 22, 2025 02:02 AM


Google News
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை நடக்கிறது என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில், நாளை மதியம், 3:00 மணிக்கு நாமக்கல் கோட்டத்திற்கு, நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும் நடக்கிறது.

இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடு பொருள் இருப்பு விபரங்கள், செயல்படுத்தப்பட்டு வரும் மானிய திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us