Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ரூ.2.50 கோடிக்கு மாடுகள் விற்பனை

ADDED : செப் 10, 2025 01:01 AM


Google News
புதுச்சத்திரம், எருமப்பட்டி யூனியன், புதன்சந்தையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு, வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல், இந்த சந்தைக்கு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மாடுகளை வாங்கி செல்ல வந்து செல்கின்றனர்.

ஓனம் பண்டிகை முடிந்ததையொட்டி, நேற்று நடந்த மாட்டுச்சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வருகை குறைந்ததால் விற்பனை குறைந்து, 2.50 கோடி ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us