ADDED : ஜூலை 22, 2024 08:20 AM
குமாரபாளையம் ; தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க, நகர ஒன்றிய மாநாடு குமாரபாளையத்தில் நடந்-தது.
நிர்வாகி சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும். வீடு இல்லாத கூலித்தொழிலாளர்களுக்கு, வீட்-டுமனை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, நகர தலைவராக அசோகன், நகர செயலராக பாலகிருஷ்ணன், துணைத்தலைவ-ராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டனர்.