Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கொல்லிமலையில் விசேஷங்களுக்கு சாராயம் காய்ச்சினால் நடவடிக்கை

கொல்லிமலையில் விசேஷங்களுக்கு சாராயம் காய்ச்சினால் நடவடிக்கை

கொல்லிமலையில் விசேஷங்களுக்கு சாராயம் காய்ச்சினால் நடவடிக்கை

கொல்லிமலையில் விசேஷங்களுக்கு சாராயம் காய்ச்சினால் நடவடிக்கை

ADDED : ஜூலை 25, 2024 01:27 AM


Google News
சேந்தமங்கலம்: கொல்லிமலையில் வாழவந்திநாடு போலீஸ் மற்றும் மது விலக்கு பிரிவு சார்பில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் ஒழிப்பு, கள்-ளத்துப்பாக்கி பயன்பாடு குறித்த சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் வல்வில் ஓரி அரங்கில் நடந்தது.

ஏ.டி.எஸ்.பி., தனராசு முன்-னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வரவேற்றார். எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் கலந்துகொண்டார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: கொல்லிமலையில் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட விசேஷங்-களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விருந்தில் கொடுப்பதாக புகார் வரு-கிறது. இந்த கலாசாரத்தை மலைவாழ் மக்கள் முற்றிலும் மாற்ற வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்பவர்களுக்கு, தற்போது அரசு கடுமையான தண்டனையை சட்டமாக அறிவித்-துள்ளது. இதை கண்டிப்பாக மலைவாழ் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். திருமண விழாக்களுக்கு சாராயம் காய்ச்சியதாக கண்டு-பிடிக்கப்பட்டால், மணமகன், மணமகளின் தந்தை உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யப்படுவர். மேலும், விசேஷ வீடு-களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மது பழக்கத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும். கொல்லிமலையில் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் கூட இல்லை என்றால், நம் மாவட்டம் கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us