Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ஏ.கே.வி., பள்ளியில் ரத்த தான முகாம்

ஏ.கே.வி., பள்ளியில் ரத்த தான முகாம்

ஏ.கே.வி., பள்ளியில் ரத்த தான முகாம்

ஏ.கே.வி., பள்ளியில் ரத்த தான முகாம்

ADDED : ஜூன் 16, 2025 06:55 AM


Google News
நாமக்கல்: உலக ரத்ததான தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்டம், மல்லச-முத்திரம் ஏ.கே.வி., பப்ளிக் பள்ளியில் ரத்ததான முகாம் நடந்-தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய முகாமை, ஆசிரியர் சதீஸ்-குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, சேலம் கே.எஸ்.எம்., ரத்த வங்கி மருத்துவ அலுவலர் வெங்கடேசன், ரத்த தானத்தின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார். மாணவர்களும் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர். தாளாளர் முத்துசாமி, ரத்த வகைகள் மற்றும் ரத்த தானத்தின் விதி-முறைகள் பற்றி பேசினார். ஏ.கே.வி., பப்ளிக் பள்ளி முதல்வர் பழனிவேல், ஏ.கே.வி., மெட்ரிக் பள்ளி முதல்வர் இளமுருகள் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர். மாணவர்களுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் ரத்ததானம் அளித்தனர். இறுதியாக பள்ளி மாணவி கனிஷ்கா நன்றி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us