Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

ADDED : ஜூலை 11, 2024 12:41 AM


Google News
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், மாரப்பம்பா-ளையம் அருந்ததியர் தெரு அருகே, 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

இந்த நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள், கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தா-ரிடம், ஓராண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். காலதாம-தமானதால், மா.கம்யூ., சார்பில், சில வாரங்களுக்கு முன் போராட்டம் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, ஆர்.ஐ., அனுராதா, துணை தாசில்தார் கனகலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று அளவீடு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் பணிகள் முழுமை பெறவில்லை. இதுகுறித்து அப்ப-குதி மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எங்களுக்கு இன்று நேரமில்லை; இன்னொரு நாள் வந்து அளவீடு செய்து தரு-கிறோம்' என, பதிலளித்துள்ளனர். இதனால், கோபமடைந்த மக்கள், கவுன்சிலர் சுரேஷ் தலைமையில், சாலை மறியலில் ஈடு-பட்டனர். ஆர்.ஐ., அனுராதா முழுமையாக அளவீடு செய்து தருவ-தாக உத்திரவாதம் அளித்ததையடுத்து, மக்கள் மறியலை கைவிட்-டனர். இதனால் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us