ADDED : பிப் 25, 2024 04:05 AM
கரூர்: கரூர் மாவட்ட, பா.ஜ., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அதில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும், 27ல் நடைபெற உள்ள, என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில், கரூர் மாவட்டத்தில் இருந்து, ஒரு லட்சம் பேர் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட செயலர்கள் செல்வராஜ், கதிரேசன், பொருளாளர் குணசேகரன், வக்கீல் பிரிவு தலைவர் உமாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.
அதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம், காங்., - வி.சி.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.