Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சுங்கம் வசூலித்தவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

சுங்கம் வசூலித்தவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

சுங்கம் வசூலித்தவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

சுங்கம் வசூலித்தவர் மீது தாக்குதல்: ஒருவர் கைது

ADDED : செப் 11, 2025 01:54 AM


Google News
ப.வேலுார் :நாமக்கல் மாவட்டம், பரமத்தி டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், கடைகளுக்கு வரும் சரக்கு வாகனத்திற்கு, சுங்க வரி வசூல் செய்யும் ஏலத்தை கோபி என்பவர் எடுத்துள்ளார். இவரிடம், பரமத்தியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் மகன் உஜ்வல், 19, வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம், பரமத்தி பகுதியில் சிமென்ட் லாரிக்கு சுங்கவரி வசூல் செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த ரவி, 52, என்பவருக்கும், உஜ்வலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், கைகலப்பாக மாறியது. அப்போது, ரவி தன்னை தாக்கியதாக, உஜ்வல், பரமத்தி போலீசில் புகாரளித்தார். பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us