/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தேவாலயம் புதுப்பிக்க கூடுதல் மானியம் விண்ணப்பித்து பயன்பெற அழைப்புதேவாலயம் புதுப்பிக்க கூடுதல் மானியம் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு
தேவாலயம் புதுப்பிக்க கூடுதல் மானியம் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு
தேவாலயம் புதுப்பிக்க கூடுதல் மானியம் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு
தேவாலயம் புதுப்பிக்க கூடுதல் மானியம் விண்ணப்பித்து பயன்பெற அழைப்பு
ADDED : ஜூன் 24, 2024 07:10 AM
நாமக்கல் : 'கிறிஸ்தவ தேவாலயங்களை புதுப்பிக்க, தமிழக அரசு சார்பில் கூடுதல் மானிய உதவி வழங்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு, 2016-17ம் ஆண்டு முதல், தமிழக அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விபரம் வருமாறு:
சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், மைக்செட் மற்றும் ஒலிபெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்கள் மற்றும் பக்தர்கள் அமர்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற ஆலயங்களுக்கு தேவையான உபகரணங்கள் வாங்குதல், தேவாலயத்திற்கு சுற்றுச்சுவர் வசதி அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள நிதி உதவி வழங்கப்படுகிறது.கட்டி முடிக்கப்பட்டு, பத்து முதல், 15 வயது வரையான கட்டடங்களுக்கு, இரண்டு லட்சத்தில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல், 20 ஆண்டுகள் வயதான தேவாலய கட்டடங்களுக்கு, நான்கு லட்சத்தில் இருந்து, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் வயதான கட்டடங்களுக்கு, ஆறு லட்சத்தில் இருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்து, புனரமைத்துக் கொள்ள விரும்பினால், தேவாலய நிர்வாகிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும், விபரங்களுக்கு, நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.