/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆம்புலன்சில் டிரைவர், உதவியாளர் பணி: 60 தேர்வர்களில் 20 பேர் தேர்வுஆம்புலன்சில் டிரைவர், உதவியாளர் பணி: 60 தேர்வர்களில் 20 பேர் தேர்வு
ஆம்புலன்சில் டிரைவர், உதவியாளர் பணி: 60 தேர்வர்களில் 20 பேர் தேர்வு
ஆம்புலன்சில் டிரைவர், உதவியாளர் பணி: 60 தேர்வர்களில் 20 பேர் தேர்வு
ஆம்புலன்சில் டிரைவர், உதவியாளர் பணி: 60 தேர்வர்களில் 20 பேர் தேர்வு
ADDED : ஜூன் 10, 2024 01:13 AM
நாமக்கல்: கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கு நடந்த நேர்முக தேர்வில், மாவட்டம் முழுதும் இருந்து, 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதில், 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக அரசின், '1962' இலவச கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் திட்டம், அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகளின் உயிரை காக்கும் நோக்கத்தோடு, 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. கால்நடை மருத்துவமனை வசதி இல்லாத கிராமங்களிலும் கூட, '1962' எனும் இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், மருத்துவ வசதி தேவைப்படும் இடத்திற்கே மருத்துவ ஊர்தி அனுப்பி வைக்கப்படும்.
இந்த மருத்துவ ஊர்திகளில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், டிரைவர் ஆகியோர் தயார் நிலையில் இருப்பர். இந்த வாகனங்கள், காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை இயக்கப்படும். அவசர சிகிச்சைக்காக, 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இந்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் உதவியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு, நாமக்கல் - மோகனுார் சாலையில் அமைந்துள்ள பழைய மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள, 108 ஆம்புலன்ஸ் சேவை அலுவலகத்தில், நேற்று நடந்தது. மண்டல மேலாளர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். மாவட்ட மேலாளர் மனோஜ், வாகன பராமரிப்பு மேலாளர் மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை நேர்முகத்தேர்வு நடந்தது.
அதில், நாமக்கல், திருச்சி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 60க்கும் மேற்பட்ட டிரைவர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், கல்வி சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை சரி பார்க்கப்பட்டது. முடிவில், டிரைவர் பணிக்கு, 5 பேர், உதவியாளர் பணிக்கு, 15 பேர் என, மொத்தம், 20 பேர் தேர்வு செய்யப்
பட்டனர்.