Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/தக்கை பூண்டு விதைக்க பருத்தி விவசாயிகளுக்கு அறிவுரை

தக்கை பூண்டு விதைக்க பருத்தி விவசாயிகளுக்கு அறிவுரை

தக்கை பூண்டு விதைக்க பருத்தி விவசாயிகளுக்கு அறிவுரை

தக்கை பூண்டு விதைக்க பருத்தி விவசாயிகளுக்கு அறிவுரை

ADDED : பிப் 25, 2024 03:43 AM


Google News
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்டார பருத்தி விவசாயிகள், சணப்பை, தக்கை பூண்டு விதைக்க வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் அதிகளவு மானாவாரியாகவும், தண்ணீர் உள்ள வயலிலும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தி விவசாயிகளுக்கு, வேளாண்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் வயலிலே மடக்கி உழுவதற்கு சணப்பை அல்லது தக்கைப்பூண்டு விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வது- அனைத்து பருத்தி ரகங்களுக்கும் ஏற்றது.

பருத்தி சாகுபடியின் போது, இருவரிசையில் பருத்தி விதைத்த பின், ஒரு வரிசை சணப்பை அல்லது தக்கைப்பூண்டினை விதைக்கலாம். 50 சதவீதம் பசுந்தாள் பயிர்கள் பூக்க ஆரம்பித்தவுடன் மடக்கி உழவு செய்யவேண்டும்.

இதனால் மண் வளம் மேம்படுவதோடு களைக்கட்டுப்பாடும் சாத்தியமாகிறது. இதனால், 16 சதவீதம் மகசூல் (விதையுடன் கூடிய பஞ்சு) மற்றும் 33 சதவீதம் களைக்கட்டுப்பாடும் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us