Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மக்கள் குறைதீர் கூட்டத்தில் 540 கோரிக்கை மனு அளிப்பு

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 540 கோரிக்கை மனு அளிப்பு

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 540 கோரிக்கை மனு அளிப்பு

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 540 கோரிக்கை மனு அளிப்பு

ADDED : ஜூலை 01, 2025 01:23 AM


Google News
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி

கள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 540 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட டி.ஆர்.ஓ., பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூன்று பேருக்கு, 11,710 ரூபாய் மதிப்புள்ள மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலி, காதொலி கருவிகள் வழங்கப்பட்டன. தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us