/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ மக்கள் குறைதீர் கூட்டத்தில் 422 மனுக்கள் வழங்கல் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 422 மனுக்கள் வழங்கல்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 422 மனுக்கள் வழங்கல்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 422 மனுக்கள் வழங்கல்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் 422 மனுக்கள் வழங்கல்
ADDED : செப் 02, 2025 01:19 AM
நாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 422 மனுக்கள் வரப்பெற்றன.
அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். சிப்காட் தனி டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.