/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/3 புதிய கிரிமினல் சட்டங்களை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்3 புதிய கிரிமினல் சட்டங்களை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்
3 புதிய கிரிமினல் சட்டங்களை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்
3 புதிய கிரிமினல் சட்டங்களை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்
3 புதிய கிரிமினல் சட்டங்களை கண்டித்து வக்கீல்கள் போராட்டம்
ADDED : ஜூலை 10, 2024 07:03 AM
நாமக்கல்: மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள, மூன்று கிரிமினல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு, வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிரிமினல் சட்டங்களான, இந்திய தண்டனை சட்டம், 'பாரதிய நியாய சன்ஹிதா' (பி.என்.எஸ்.,), இந்திய குற்றவியல் விசாரணை முறைச்சட்டம், 'பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா' (பி.என்.எஸ்.எஸ்.,), இந்திய சாட்சிய சட்டம், 'பாரதிய சாக் ஷய அதிநியம்' (பி.எஸ்.ஏ.,) என, பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சட்ட பிரிவுகளில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த, 1 முதல், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.இந்நிலையில், 3 புதிய சட்டங்களையும் முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி, நாமக்கல்லில் வக்கீல்கள் சங்கத்தினர், கடந்த, 1 முதல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.*ராசிபுரம் தபால் நிலையம் முன், ராசிபுரம் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு - பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க வக்கீல்கள் என, 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.