Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து

பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து

பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து

பீஹாரில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் மக்காச்சோளம் வரத்து

ADDED : ஜூன் 13, 2024 06:58 AM


Google News
நாமக்கல் : பீஹாரில் இருந்து சரக்கு ரயில் மூலம், 2,600 டன் மக்காச்சோளம் நாமக்கல்லுக்கு

வரத்தானது.

நாமக்கல் பகுதியில் செயல்படும் கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்களும், பெரும்பாலும் வடமாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவன மூலப்பொருட்களான மக்காச்சோளம், பீஹார் மாநிலத்தில் இருந்து, 2,600 டன் வாங்கி அங்கிருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று வரவழைக்கப்பட்டது.பின், அங்கிருந்து, 90 லாரிகளில் ஏற்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் செயல்படும் தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்

பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us