/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மாவட்டத்தில் ரூ.23,549 கோடிக்கு கடன் மதிப்பீடுமாவட்டத்தில் ரூ.23,549 கோடிக்கு கடன் மதிப்பீடு
மாவட்டத்தில் ரூ.23,549 கோடிக்கு கடன் மதிப்பீடு
மாவட்டத்தில் ரூ.23,549 கோடிக்கு கடன் மதிப்பீடு
மாவட்டத்தில் ரூ.23,549 கோடிக்கு கடன் மதிப்பீடு
ADDED : ஜன 06, 2024 01:12 PM
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், வங்கியாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. அதில், நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை 2024--25யை, கலெக்டர் உமா வெளியிட்டு பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், விவசாயத்தில் நீண்டகால கடன் அளிப்பதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது. அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்திற்கு, 2024--25ம் ஆண்டுக்கு, பயிர் கடன், 10,631.17 கோடி ரூபாய், விவசாய முதலீட்டு கடன், 2,717.47 கோடி ரூபாய். விவசாய கட்டமைப்பு கடன், 70.62 கோடி ரூபாய், விவசாய இதர கடன்கள், 1,037.18 கோடி ரூபாய் என, விவசாயத்திற்கான மொத்த கடன், 14,456.45 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறு, குறு நடுத்தர தொழில் கடன், 8,034 கோடி ரூபாய், ஏற்றுமதி, கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன், 182.40 கோடி ரூபாய், அடிப்படை கட்டுமான வசதி, 62.25 கோடி ரூபாய், சுய உதவிக்குழு மற்றும் கூட்டு பொறுப்பு குழுக்கான கடன் அளவு, 785.70 கோடி ரூபாய் என, மொத்தம், 23,549.20 கோடி ரூபாய் அளவுக்கு கடனாற்றல் உள்ளது என, மதிப்பீடு செய்து, கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற கடன் வசதிகள், விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வங்கிகள் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நாமக்கல் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், முன்னோடி வங்கி மேலாளர் முருகன், மண்டல மேலாளர் சீனிவாஸ், உள்பட பலர் பங்கேற்றனர்.