Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரத்தில் ரூ.37 லட்சத்தில் 2 பால் குளிரூட்டும் நிலையம்

ராசிபுரத்தில் ரூ.37 லட்சத்தில் 2 பால் குளிரூட்டும் நிலையம்

ராசிபுரத்தில் ரூ.37 லட்சத்தில் 2 பால் குளிரூட்டும் நிலையம்

ராசிபுரத்தில் ரூ.37 லட்சத்தில் 2 பால் குளிரூட்டும் நிலையம்

ADDED : ஜூன் 15, 2025 01:55 AM


Google News
ராசிபுரம், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில், 37 லட்சம் ரூபாய் மதிப்பில் பால் குளிரூட்டும் நிலையங்கள், நேற்று திறக்கப்பட்டது. ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், மலையாம்பட்டி ஊராட்சி மற்றும் வெண்ணந்துார் ஊராட்சி ஒன்றியம், மின்னக்கல் பகுதிகளில், 37.55 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு பால் குளிரூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டு வந்தது.

இப்பணி முடிந்த நிலையில், நேற்று அமைச்சர் மதிவேந்தன் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். மேலும், சிறந்த பால் உற்பத்தியாளர்கள், ஆறு பேருக்கு பரிசு வழங்கினர்.

தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசுகையில், ''கடந்த மாதம், ராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில், 1.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எட்டு புதிய தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்களை திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது,'' என்றார்.

அட்மா குழு தலைவர்கள் துரைசாமி, ஜெகன்நாதன், ஆவின் பொது மேலாளர் சண்முகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us