/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு
ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு
ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு
ம.பி.,யில் இருந்து 1,300 டன் சோயா வரவழைப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:53 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழித்தீவன அரவை ஆலைகளின் தேவைக்காக, மத்திய பிரதேசத்தில் இருந்து, 1,300 டன் சோயா சரக்கு ரயிலில் வரவழைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், அதேபோல் மாவட்டத்தில் உள்ள, 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளின் தீவன ஆலைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் வாங்கி வரப்படும்
. அதன்படி, கோழித்தீவனத்துக்காக, மத்தியபிரதேச மாநிலம், பாராஸில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 1,300 டன் சோயா, நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து லாரிகளில் ஏற்றி நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.