/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ நாமக்கல்லில் வரும் 25ல் விரால் மீன் வளர்க்க பயிற்சி நாமக்கல்லில் வரும் 25ல் விரால் மீன் வளர்க்க பயிற்சி
நாமக்கல்லில் வரும் 25ல் விரால் மீன் வளர்க்க பயிற்சி
நாமக்கல்லில் வரும் 25ல் விரால் மீன் வளர்க்க பயிற்சி
நாமக்கல்லில் வரும் 25ல் விரால் மீன் வளர்க்க பயிற்சி
ADDED : ஜூன் 14, 2024 01:09 AM
நாமக்கல், 'நாமக்கல்லில், வரும், 25ல் விரால் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடக்கிறது' என, நாமக்கல் வேளாண்
அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும், 25ல் விரால் மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது. இப்பயிற்சியில், மீன் பண்ணை குட்டை அமைக்க இடம் தேர்வு, மண், நீர் பரிசோதனை, பண்ணை குட்டை அமைத்தல், மீன்குஞ்சு உற்பத்தி, தேர்வு செய்தல், உணவு, நோய் மேலாண்மை முறைகள் போன்ற தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மேலும், மத்திய, மாநில அரசு மூலம் மீன் வளர்ப்புக்குள்ள மானியம் குறித்தும் விளக்கிக் கூறப்படும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு இந்தாண்டிற்கான மீன் குஞ்சுகள் இடுபொருட்கள் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். மகளிர் மற்றும் சுய தொழில் மேற்கொள்ள ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம்.
ஆர்வம் உள்ளவர்கள், 04286-266345, 266650, 7358594841 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பெயர் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், பயிற்சியில் பங்கேற்போர் ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.