Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ADDED : ஆக 02, 2024 01:46 AM


Google News
குமாரபாளையம், குமாரபாளையம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மதிவதனி, 29. இவரது கணவர் அம்சமணி, 37. பெருந்துறை தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றுமுன்தினம் காலை, 9:30 மணியளவில் அம்சமணி வேலைக்கு போக, குழந்தைகள் பள்ளிக்கு போக, மாமனார் சுப்பிரமணி, 65, மாமியார் செல்லம்மாள், 62, இருவரும் உறவினர் துக்க வீட்டிற்கு சென்றனர். மதிவதனி மாடு மேய்க்க சென்றார்.

காலை, 11:00 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் போது, கிரில் கதவு, வீட்டின் கதவு திறந்த நிலையிலும் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறந்து துணி மணிகள் சிதறி கிடந்துள்ளது. கட்டில் அடிப்பகுதியில் வைத்திருந்த, 7 ¾ பவுன் தங்க தாலிக்கொடி, சுவாமி படத்தின் பின்புறம் வைத்திருந்த 8,000 ரூபாய் ரொக்கம், கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். கார்டு ஆகியன திருடப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து மதிவதனி புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us