/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ப.வேலுாரில் தேங்காய் கிலோவுக்கு ரூ.2 உயர்வு ப.வேலுாரில் தேங்காய் கிலோவுக்கு ரூ.2 உயர்வு
ப.வேலுாரில் தேங்காய் கிலோவுக்கு ரூ.2 உயர்வு
ப.வேலுாரில் தேங்காய் கிலோவுக்கு ரூ.2 உயர்வு
ப.வேலுாரில் தேங்காய் கிலோவுக்கு ரூ.2 உயர்வு
ADDED : ஜூன் 06, 2024 04:02 AM
ப.வேலுார்: ப.வேலுாரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், நேற்று முன்தினம் தேங்காய் ஏலம் நடந்தது.
இங்கு, ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதேபோல், உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளி மாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 12,702 தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.கடந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 24.19 ரூபாய், குறைந்தபட்சம், 21.25 ரூபாய், சராசரி, 22.29 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சம் ரூபாய்க்கு தேங்காய் வர்த்தகமானது.நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 26.39 ரூபாய், குறைந்தபட்சம், 20.79 ரூபாய், சராசரி, 22.29 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 1,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கிலோவுக்கு, 2 ரூபாய் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.