/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்:ரூ.1.2 கோடியில் நலத்திட்ட உதவி 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்:ரூ.1.2 கோடியில் நலத்திட்ட உதவி
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்:ரூ.1.2 கோடியில் நலத்திட்ட உதவி
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்:ரூ.1.2 கோடியில் நலத்திட்ட உதவி
'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம்:ரூ.1.2 கோடியில் நலத்திட்ட உதவி
ADDED : ஜூலை 21, 2024 02:39 AM
ராசிபுரம்,ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த, 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாமில், 104 பயனாளிகளுக்கு, 1.2 கோடி ரூபாயில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் உமா தலைமை வகித்தார். முகாமில், பல்வேறு உதவிகள் கேட்டு வந்த, 104 பயனாளிகளுக்கு, 1.2 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
தொடர்ந்து, எம்.பி., ராஜேஸ்குமார் பேசியதாவது: ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பொதுமக்கள் அதிகளவில் அணுகும் அரசுத்துறைகளான, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, எரிசக்தித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட, 15 துறைகள் சார்ந்த கோரிக்கைகளை பெற்று, 30 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒன்றிய தலைவர் ஜெகநாதன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, வேளாண்மை இணை இயக்குனர் பொறுப்பு கவிதா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.