Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

காலி பணியிடங்களை நிரப்ப சத்துணவு பணியாளர் கோரிக்கை

ADDED : ஜூலை 18, 2024 01:09 AM


Google News
ப.வேலுார், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணி-யிடங்களை நிரப்பக்கோரி, தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்-னேற்ற சங்கத்தினர் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் முன்னேற்ற சங்க கூட்டம், பொத்தனுாரில் உள்ள சங்க அலுவலகத்தில் மாநில தலைவர் முருகன் தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்-றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் ஆகியோருக்கு, கடந்த, எட்டு மாதமாக கால தாமதமாக ஓய்வூ-தியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே கால தாமதம் செய்-யாமல், மாதத்தின் கடைசி நாளில் வழங்க வேண்டும்.

சத்துணவு மையம், அங்கன்வாடி மையங்களில் காலி பணியிடங்-களை நிரப்பாததால், ஒரு அமைப்பாளர், மூன்று சத்துணவு மையங்கள் பொறுப்பேற்று நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பணியாளர்களின் நலன் கருதி காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்

பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us