Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விவசாயிகளுக்கு உரமிடல் பயிற்சி

விவசாயிகளுக்கு உரமிடல் பயிற்சி

விவசாயிகளுக்கு உரமிடல் பயிற்சி

விவசாயிகளுக்கு உரமிடல் பயிற்சி

ADDED : ஜூலை 18, 2024 01:10 AM


Google News
பள்ளிப்பாளையம்,: பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பள்ளிப்பாளையம் வட்டார வேளாண்மை துறை சார்பில், நேற்று முன்தினம், சமச்சீர் உர-மிடல், ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை குறைத்தல் பற்-றிய உள் மாவட்ட பயிற்சி, வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் நடந்தது.

இயற்கை விவசாயி நல்லசிவம், அங்கக மற்றும் பசுந்தாழ் உரங்-களின் பயன்பாடுகள், சணப்பை, தக்கப்புண்டு, நவதானியங்-களின் முக்கியத்துவம், நன்மை செய்யும் பூச்சியின் நன்மைகள் குறித்து எடுத்து கூறினார். மேலும், வேளாண்மை துறை அதிகா-ரிகள், மானிய திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி-ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ப்பு துறை, வேளாண்மை வணிக துறை, மண் பரி-சோதனையின் முக்கியத்துவம், மண்ணிலுள்ள சத்துக்களின் பயன்கள், மண் மற்றும் நீர் மாதிரியை எவ்வாறு சேகரித்தல், சாகு-படி தொழில்நுட்பங்கள், நுண்ணீர் பாசனம், மண் புழு வளர்ப்பு, பயிர் காப்பீடு, பிரதம மந்திரி கவுரவ நிதி, உழவன் செயலியில் தமிழ் மண் வளம், மானிய திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் விளக்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us