/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ ராசிபுரம் அரசு கல்லுாரியில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு ராசிபுரம் அரசு கல்லுாரியில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு
ராசிபுரம் அரசு கல்லுாரியில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு
ராசிபுரம் அரசு கல்லுாரியில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு
ராசிபுரம் அரசு கல்லுாரியில் இன்று 2ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 24, 2024 03:11 AM
ராசிபுரம்;ராசிபுரம் அரசு கலை கல்லுாரியில், 2ம் கட்ட மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, இன்று தொடங்குகிறது.
ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார் கேட் அரசு கல்லுாரியில், 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை சிறப்பு ஒதுக்கீட்டுடன், கடந்த, 30ல் தொடங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் கலந்தாய்வு முடிந்தது. மாற்றுத்திறன் மாணவர்கள், 12, முன்னாள் ராணுவத்தினர், 1, என்.சி.சி., 1, விளையாட்டு பிரிவில், 13 என மொத்தம், 27 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். முதலாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன், 10ல் தொடங்கி, 15 நடந்தது. இதில், காலியாக உள்ள, 955 இடங்களில், 613 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இன்று தொடங்கி, 29 வரை நடக்கிறது. இது குறித்து தகவலை இக்கல்லுாரிக்கு, மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மின்னஞ்சல், வாட்ஸாப், மொபைல் போன் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.