Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

தாலி செயின் பறித்த திருடன் 24 மணி நேரத்தில் கைது

ADDED : ஜூலை 24, 2024 07:19 AM


Google News
வெண்ணந்துார் : வெண்ணந்துாரில், அதிகாலையில் பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்றவரை, 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்-தனர்.

ராசிபுரம் அருகே, வெண்ணந்துார் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் மனைவி சுகுணா, 43. கடந்த, 21 இரவு தம்பதியர் வீட்டை பூட்டி விட்டு துாங்கி உள்ளனர். மறுநாள் அதி-காலை நந்தகுமார் நடைபயிற்சி செல்வதற்காக, வீட்டின் கதவை திறந்து சென்றுள்ளார். இதனை கவனித்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், சுகுணா அணிந்திருந்த, 8 பவுன் தாலி செயினை பறித்து சென்றார். நகையை அறுத்துக்கொண்டு, திருடன் வேக-மாக ஓடுவது அப்பகுதி கண்காணிப்பு கேமரா வில் பதிவானது.

வெண்ணந்துார் போலீசார், நேற்று காலை ஏரிக்கரை அருகே இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் சோதனையில் ஈடுபட்ட-போது, வெண்ணந்துார் ராஜ

கணபதி கோவில் தெரு செந்தில் குமார் மகன் தமிழரசன், 27, பிடிபட்டார். இவர்தான், சுகுணவிடம் 8 பவுன் தாலி செயினை பறித்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 8 பவுன் தாலி செயினை பறிமுதல் செய்தனர். திருடனை, 24 மணி நேரத்தில் பிடித்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us