Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ உரக்கடைகளில் அதிகாரிகள் சோதனை விதி மீறினால் 'உரிமம் ரத்து' எச்சரிக்கை

உரக்கடைகளில் அதிகாரிகள் சோதனை விதி மீறினால் 'உரிமம் ரத்து' எச்சரிக்கை

உரக்கடைகளில் அதிகாரிகள் சோதனை விதி மீறினால் 'உரிமம் ரத்து' எச்சரிக்கை

உரக்கடைகளில் அதிகாரிகள் சோதனை விதி மீறினால் 'உரிமம் ரத்து' எச்சரிக்கை

ADDED : ஜூலை 03, 2024 07:46 AM


Google News
நாமக்கல், : நாமக்கல் மாவட்டத்தில், வேளாண் பயிர்கள் சாகுபடி தீவிரம-டைந்துள்ள நிலையில், பயிர்களுக்கு தேவையான உரங்கள் சரிவர விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என, வேளாண் இயக்குனர் அறிவுரைப்படி, சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள தனியார், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உரங்கள், சரி-யாக இருப்பு வைக்கப்பட்டு முறையாக உரக்கட்டுப்பாட்டு விதிகள் படி வினியோகம் செய்யப்படுகிறதா என, ஆய்வு செய்-யப்பட்டது.

'உர விற்பனை நிலையங்களில் விதி மீறல் ஊர்ஜிதமானால், உர உரிமம் ரத்து செய்யப்படும்' என அதிகாரிகள் எச்சரித்தனர்.

'உர நிறுவனங்களில், உரங்களின் இருப்பு, அதன் விலை குறித்த விலைப்பட்டியல் இருக்க வேண்டும். உரிமம் இன்றி உரம் விற்-பனை செய்தால், உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 'உர உரிமத்தில் முதன்மை சான்றுகள் இணைக்கப்பட்ட உரங்க-ளையே நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும். மாவட்டத்-திற்கு, தற்போது தேவையான அளவு உரங்கள் மொத்தம், 9,541 மெட்ரிக் டன், தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 'இதுபோன்ற ஆய்வுகள், அவ்வப்போது திடீரென மேற்கொள்ளப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us