Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்ததாக வருவாய்துறை மீது புகார்

முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்ததாக வருவாய்துறை மீது புகார்

முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்ததாக வருவாய்துறை மீது புகார்

முன்னறிவிப்பு இன்றி வீட்டை இடித்ததாக வருவாய்துறை மீது புகார்

ADDED : ஜூலை 03, 2024 07:45 AM


Google News
ராசிபுரம் : ராசிபுரம், வெண்ணந்துார் தங்கசாலை வீதி வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைசாமி மனைவி கனகாம்பாள். இவர், நேற்று ராசி-புரம், டி.எஸ்.பி.,யிடம் கொடுத்த புகார் மனுவில், 'நான் மேற்-கண்ட முகவரியில், 20 ஆண்டாக வசித்து வருகிறேன். நான் வசிக்கும் இடம், 1984ல் அரசின் இலவச பட்டா மூலம் கிடைத்-தது.

நேற்று முன்தினம் வருவாய் துறையினர் முன்னறிவிப்பின்றி, என் வீட்டை இடித்தனர். அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' என, தெரி-விக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, வருவாய் துறையினரிடம் கேட்டபோது, 'கன-காம்பாள் வீட்டிற்கு பின்புறம் வசிப்பவர் ராணி. இவரது வீட்-டிற்கு கனகாம்பாள் வீடு வழியாகத்தான் வழித்தடம் உள்ளது. தற்-போது அந்த வழியை அடைத்து தான் வீடு கட்டியுள்ளார். இதனால், ராணி, தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் முறையிட்டு வழிப்பதை பெற்றார்.

இந்த பிரச்னை, 3 ஆண்டாக நடந்து வருகிறது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், வழித்தடத்தில் கட்டியிருந்த வீடு இடிக்-கப்பட்டது'

என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us