/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
செயற்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி ஆசிரியர் கல்வி நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ADDED : ஜூலை 17, 2024 09:09 AM
நாமக்கல், : மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு-வனம், ரோட்டரி மாவட்ட கல்விக்குழு சார்பில், ஓராண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும் நிகழ்ச்சி, நாமக்கல்லில் நடந்தது. நிறுவன முதல்வர் செல்வம் தலைமை வகித்தார். துணை முதல்வர் அமீருன்னிசா வரவேற்றார். பயிற்சி நிறுவன நிர்வாகி வெங்கடேஸ்வரா குப்தா முன்-னிலை வகித்தார்.
விடுமுறை நாட்கள், ஓய்வு நேரங்கள், பள்ளி இல்லா நேரங்களில் ஆசிரியர்களுக்கு தன்னார்வ திறன் மேம்பாட்டு பயிற்சி, பள்ளிகளில் அறி-வியல் தோட்டம், சுற்றுச்சூழல் மேம்பாடு, மிக சிறிய செய்கைக்கோள் ஏவுதலுக்கான பயிற்சி, ரோபோட்டிக் பயிற்சி கொடுத்தல் ஆகியவற்-றிற்கு, ஓராண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்-தத்தில், நிறுவன முதல்வர் செல்வம், ரோட்டரி மாவட்ட ஆளுனர் சிவக்குமார் ஆகியோர் கையெழுத்திட்டனர். முன்னதாக, பள்ளிகளில் அறிவியல் தோட்டம் அமைக்க, அறிவியல் தேரோட்டத்தை பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், மோகனுார் ஒன்றி-யத்தில், 10 நடுநிலைப்பள்ளிகளுக்கு, ரோட்டரி பள்ளி நுாலகம் திட்டத்தில், புத்தகங்கள் வைப்ப-தற்கு வசதியாக, 'ஸ்டீல் பீரோ' வட்டார கல்வி அலுவலர்கள் வினோத்குமார், இளங்கோ முன்-னிலையில் வழங்கப்பட்டது.