Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்

விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்

விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்

விதிமுறை மீறி இயக்கிய 35 வாகனங்கள் பறிமுதல்

ADDED : ஜூலை 07, 2024 01:01 AM


Google News
நாமக்கல் : வட்டார போக்குவரத்து துறையினர் நடத்திய வாகன சோத-னையில், விதிமுறை மீறி இயக்கப்பட்ட, 35 வாகனங்கள் பறி-முதல் செய்யப்பட்டன. 4.87 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்-பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்-கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாமக்கல், ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன், சரவணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்-திவேல், உமா மகேஸ்வரி, நித்யா, சரவணன் ஆகியோர், கடந்த, ஜூனில் தொடர்ச்சியாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த வாகன சோதனையின்போது, மொத் தம், 2,337 வாக-னங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அதில், 382 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு, 4.87 லட்சம் ரூபாய் வரியும், 3.08 லட்சம் ரூபாய் இணக்க கட்டணமும் வசூலிக்கப்-பட்டது. இந்த தணிக்கையின்போது, போதிய ஆவணங்கள் இன்-றியும், தகுதி சான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கப்பட்டது என, மொத்தம், 35 வாக-னங்கள் பறிமுதல் செய்ப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us