ADDED : மார் 23, 2025 01:24 AM
மளிகை கடைக்கு அபராதம்
ராசிபுரம்:ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, நகராட்சி சுகாதார அலுவலர் செல்வராஜ் தலைமையில், போலீசார் கடைகளில் சோதனையிட்டனர்.
தட்டான்குட்டை சாலையில் உள்ள மளிகை கடையில் ஆய்வு செய்தபோது, 400 கிராம் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்த போலீசார், மளிகை கடைக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.