Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

ADDED : மார் 14, 2025 01:52 AM


Google News
தொழிலாளி மரணம்போலீசார் விசாரணை

வெண்ணந்துார்:வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் அருகே உள்ள விநாயகபுரத்தை சேர்ந்தவர் சண்முகம், 52, கூலித் தொழிலாளி. இவரது மனைவி காந்தாமணி, 48. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், சண்முகம் கடந்த 12-ம் தேதி இரவு அளவாய்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியின் கீழே மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த அவரது மனைவி, உறவினர்களுடன் சேர்ந்து சண்முகத்தை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வெண்ணந்துார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us