Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி

குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி

குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி

குடியிருந்த வீட்டை இடித்து அகற்றியதால் ஆர்.ஐ., ஆபீசில் குடியேறிய தொழிலாளி

ADDED : ஜூலை 07, 2024 01:04 AM


Google News
வெண்ணந்துார் : வெண்ணந்துார் டவுன் பஞ்.,க்குட்பட்ட தங்க சாலை வீதியை சேர்ந்தவர் துரைசாமி, 68. தாய் பாப்பம்மாள், 80. மனைவி கன-காம்பாள், 50. தம்பதியருக்கு சங்கீதா, 37, என்ற மகள், நாகராஜ், 35, உதயகுமார், 30, கண்ணன், 24, என, மூன்று மகன்கள் உள்-ளனர். துரைசாமி கூலி வேலை செய்து வருகிறார்.

துரைசாமிக்கு, கடந்த, 40 ஆண்டுக்கு முன் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த, 1-ல் துரைசாமி குடியிருந்த வீட்டை வருவாய் துறையினர் இடித்து அகற்றினர். இதனால் வசிக்க வீடில்லாமல் தவித்த துரை-சாமி, குடும்பத்தினருடன், நேற்று, வெண்ணந்துார் ஆர்.ஐ., அலு-வலகத்தில் குடியேறினார். தகவலறிந்து வந்த போலீசார், துரை-சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால், ஆர்.ஐ., அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்-டது.இதுகுறித்து, துரைசாமி கூறுகையில், ''அரசால் வழங்கப்பட்ட இடத்தில், 40 ஆண்டாக வீடு கட்டி வசித்து வந்தேன். அதற்கு வீட்டு வரி, இதர அரசு வரிகளை முறையாக செலுத்தி வரு-கிறேன். ஆனால், எந்த அறிவிப்பும் இன்றி வீட்டை இடித்ததால், ஆர்.ஐ., அலுவலகத்தில் குடும்பத்துடன் குடியேறினேன். எனக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுப-டுவேன்,'' என்றார்.

ராசிபுரம் தாசில்தார் சரவணன் கூறுகையில், ''அரசால் ஒதுக்கப்-பட்ட இடத்தில் துரைசாமி வீடு கட்டி வசித்து வருகிறார். ஆனால், மற்றொருவர் வீட்டிற்கு செல்லும் பாதையை மறைத்து வீடு கட்டியதால், சம்பந்தப்பட்ட நபர் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் மாநில தாழ்த்-தப்பட்டோர் ஆணையம், பாதையில் உள்ள வீட்டை அகற்ற உத்-தரவு வழங்கியது. இதையடுத்து வீடு முறையாக அறிவிப்பு செய்து இடிக்கப்பட்டது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us