Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை ரூ.23 கோடியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை ரூ.23 கோடியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை ரூ.23 கோடியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகை ரூ.23 கோடியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ADDED : மார் 12, 2025 08:02 AM


Google News
நாமக்கல்: விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி முன்னிலை வகித்தார். நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி, நா.த.க., மண்டல பொறுப்பாளர்கள் அரவிந்த், சீத்தாலட்சுமி, பா.ஜ., மத்திய அரசு திட்டங்களின் மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், பனை, தென்னையில் இருந்து கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும். மோகனுாரில், விவ-சாய நிலங்களை கையகப்படுத்தி, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மோகனுார் கூட்-டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்ளை செய்த விவசாயிக-ளுக்கு வரவேண்டிய நிலுவை தொகை, 23 கோடி ரூபாயை உட-னடியாக வழங்கவேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு, நான்கு மாதமாக வழங்காமல் உள்ள லிட்டருக்கு, மூன்று ரூபாய் ஊக்கத்-தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.அவினாசி-அத்திக்கடவு திட்ட பொறுப்பாளர் வேலுச்சாமி, சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், சி.பி.ஐ., ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us