Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி பலி

கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி பலி

கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி பலி

கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி பலி

ADDED : மார் 14, 2025 01:52 AM


Google News
கட்டட வேலையின் போது தவறி விழுந்த தொழிலாளி பலி

நாமக்கல்:நாமக்கல் அருகே, கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.எருமப்பட்டி அருகே காவக்காரபட்டியை சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் ஆனந்த், 22, கட்டட தொழிலாளி. இன்னும் திருமணமாகவில்லை. நாமக்கல்-- திருச்சி சாலை, வேப்பநத்தம் பகுதியில் ஜெயராமன் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த கட்டுமான பணியில் ஆனந்த் ஈடுபட்டு வந்தார். கடந்த, 8ம் தேதி பணியில் இருந்த அவர், மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவரை தொழிலாளர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஆனந்த் இறந்தார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us